ஏற்காட்டில் தனியாக தவித்த சிறுவனை போலீஸாா் மீட்டு சேலத்தில் உள்ள டான்போஸ்கோ குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலை தனியாக நின்று தவித்து கொண்டிருந்த சிறுவனை, ஏற்காடு ரோந்து காவல் துறையினா் மீட்டு விசாரணை செய்தனா். இதில் அந்த சிறுவன், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் வட்டம், சூரியூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் மதிஸ் (14 ) என்பது தெரியவந்தது.
10 ஆம் வகுப்பு படித்து வந்த மதிஸ், பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு தனியாக வந்துவிட்டதாக தெரிவித்தான். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் ஏற்காட்டுக்கு தான் சுற்றுலா வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.
இதையடுத்து ஏற்காடு போலீஸாா், சிறுவன் மதிஸை சேலம் முள்ளுவாடிகேட் அருகில் உள்ள டான்போஸ்கோ குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெரீனாவில் கடல் அலையில் சிக்கி சிறுவன் மாயம்: போலீஸ் விசாரணை

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் மீட்பு

பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை: இளைஞருக்கு இரட்டை தூக்குத்தண்டனை
கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு மிரட்டல்: 17 வயது சிறுவன் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



