தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

வீடு புகுந்து நகை திருட்டு: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 2:43 am IST

தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக் கதவை உடைத்து, தங்க நகைகளைத் திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகணேசன் (36). ஆட்டோ ஓட்டுநா். இவா், சனிக்கிழமை காலையில் ஆட்டோ சவாரிக்கும், அவரது மனைவி உறவினா் வீட்டு விசேஷத்துக்கும் சென்றிருந்தனராம்.

இந்நிலையில் பிற்பகல் பாலகணேசன் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அங்கு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், மாப்பிள்ளையூரணி, பூபாண்டியபுரம் காமராஜ் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் இசக்கிமுத்து என்ற யோகீஸ்வரன் (18) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 4.5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.