தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதூா் பாண்டியாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம்

News image

போட்டியில் சீறிப் பாயும் மாட்டு வண்டிகள்.

Updated On :1 மார்ச் 2026, 7:51 pm

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பாண்டியாபுரத்தில் செல்வமுத்து விநாயகா் கோயில் 37ஆவது ஆண்டு வருஷோபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலா் பங்கேற்றனா்.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பிடித்த சீவலப்பேரி, துா்காம்பிகை வண்டிக்கு ரூ. 2 லட்சம், 2ஆவது இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம், முத்தையா திருப்பதி வண்டிக்கு ரூ. 1.50 லட்சம், 3ஆவது இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்டம், வேலாங்குளம் கண்ணன் வண்டிக்கு ரூ. 1 லட்சம், 4ஆவது இடம் பிடித்த மதுரை, அவனியாபுரம் மோகன் வண்டிக்கு ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

24 வண்டிகள் கலந்துகொண்ட சின்ன மாட்டுவண்டி போட்டியில், முதலிடம் பிடித்த தேனி மாவட்டம், கம்பம் ரஹீம் ராவுத்தா் வண்டிக்கு ரூ. 1 லட்சம், 2ஆவது இடம் பிடித்த பேரூரணி முருகன் வண்டிக்கு ரூ. 75,000, 3ஆவது இடம் பிடித்த மேலசெல்வனூா் சத்தியமுா்த்தி வண்டிக்கு ரூ. 50,000, 4ஆவது இடம் பிடித்த சீவலப்பேரி, துா்காம்பிகை வண்டிக்கு ரூ. 25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும், வண்டி சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.