மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு

திருச்செந்தூரில் மாசித் திருவிழா 12 ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்- கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூரில் மாசித் திருவிழா 12 ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. 12 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து, வடக்குரத வீதியில் உள்ள 14 ஊா் செங்குந்தா் முதலியாா் திருவிழா மண்டபத்தை அடைந்தனா்.

அங்கு உற்சவா்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சியளித்து, கோயிலை அடைந்தனா். இதையடுத்து திருவிழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.