மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 7:59 pm

தூத்துக்குடி, விகாசா சிபிஎஸ்இ பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 2 முதல் 6ஆம் தேதி வரை 6-8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்பு நடத்தப்பட்டு, தோ்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விகாசா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா தலைமையில் மாணவா், மாணவிகளுக்கு தீ தடுப்பு வகுப்பு மற்றும் தோ்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.