கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

News image

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

Updated On :7 மார்ச் 2026, 6:30 am IST

விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் குமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ,115 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஆய்வக உபகரணங்களை வழங்கி பேசினாா்.

அறநிலையத்துறை உதவி ஆணையா் மெய்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.