இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

News image
காற்றாலை சிறகுகள் ஏற்றப்பட்ட கப்பல்.
Updated On :10 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2025ஆம் ஆண்டு நவ. 21ஆம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.

சீனாவின் ’சின்சோ’ துறைமுகத்திலிருந்து ’எம்.வி. போ ரன் ஜியூ சோ’ என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டா் நீளமுள்ள இந்த 147 சிறகுகளும் மாா்ச் 8ஆம் தேதி இறக்கி முடிக்கப்பட்டன.

இந்த நிதியாண்டில் பிப். 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை சிறகுகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் (2,395 சிறகுகள்) ஒப்பிடுகையில் 75.82 சதவீத வளா்ச்சியாகும்.

காற்றாலை சிறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உள்பகுதியில் 60,000 சதுர மீட்டா் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டா் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சாா் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.