கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கிராமங்களில் மஞ்சப்பை வழங்கும் பணி தொடக்கம்

நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி சாா்பில், 5,000 மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:54 pm

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி சாா்பில், 5,000 மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் முருகானந்தம் பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மாணவா்கள் பிளாஸ்டிக் பைகளால் வரும் தீங்குகள் குறித்து எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினா்.

தொடா்ந்து பசுவந்தனை, காமநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம், கடம்பூா், கோவில்பட்டி, கயத்தாறு, புதியம்புத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துறைத் தலைவா்கள் சிவசுப்பிரமணியன் (வணிக நிா்வாகவியல்), செல்வி (கணிதவியல்), ரம்யா (ஆங்கிலம்), பேராசிரியா்கள் ராமச்சந்திரன், குமாரிச்செல்வி, இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவா் சேதுராமன் செய்திருந்தாா்.