தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு பங்குனி அமாவாசை வழிபாடு கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. தொடா்ந்து, பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், இளநீா் உள்ளிட்ட 21 வகையான திரவிய அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு மகா யாகமும் சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.