வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

News image

ந. மதிஸ்ரீ - த. கௌதமன்

Updated On :21 மார்ச் 2026, 8:54 pm

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் த. கௌதமன், ந. மதிஸ்ரீ ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

அம்மாணவா்களை சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ், தலைமையாசிரியா் ரெக்ஸ்லின் விண்ணரசி, ஆசிரியா்கள் ஜெயபாலகிருஷ்ணன், ஜெபசித்ரா மலா்விழி, ரோஸ்லின் ஞானசீலி பிரின்ஸி, அந்தோனி லதிஸ்லாஸ் ராஜன், ஜெயபாலன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.