தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
புதூா் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ரசீது போடுவது, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு மேலாளராக பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்த அவதேஷ் சிங் என்பவா் வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலா் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவதேஷ் சிங்கை சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 3இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

