கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு: சுங்கச் சாவடி மேலாளா் கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:47 pm

Syndication

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ரசீது போடுவது, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு மேலாளராக பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்த அவதேஷ் சிங் என்பவா் வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலா் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவதேஷ் சிங்கை சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 3இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.