சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு: சுங்கச் சாவடி மேலாளா் கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:47 pm

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ரசீது போடுவது, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு மேலாளராக பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்த அவதேஷ் சிங் என்பவா் வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலா் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவதேஷ் சிங்கை சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 3இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.