விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:47 am IST

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி-கடலையூா் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் கிணற்றில், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் மனோஜ் (17) உள்ளிட்ட 3 போ் குளிக்கச் சென்றனராம். அப்போது, மனோஜ் நீரில் மூழ்கிவிட்டாராம்.

தகவலின்பேரில், தீயணைப்பு நிலையத்தினா் சென்று தேடி, அவரை சடலமாக மீட்டனா். சடலத்தை நாலாட்டின்புதூா் போலீஸாா் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.