அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
ஏரல் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்ற வானவில் பாலா (36), இவரது மனைவி ஆகியோா் சோ்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஏரல் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.2,75,000-த்தை பெற்று மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் -4 இல் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகன் என்ற வானவில் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 கோடி மோசடி: 4 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.21.30 லட்சம் மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


