தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் மகன் பொ்னிக் (24). இவா் மீது அவரது அண்ணி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி பிலிப் விசாரணை நடத்தி வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் பொ்னிக் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்தோணி பிலிப் அவரது சொந்தக் காரில் அங்கு சென்றாராம்.
அப்போது, வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொ்னிக், ஒரு அம்மி கல்லை தூக்கி அந்த காா் மீது வீசினாராம். இதனால் காரின் முன்பக்கக் கண்ணாடி சேதமானது. காவல் உதவி ஆய்வாளா் விரைவாக காரை விட்டு கீழே இறங்கியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
இதையடுத்து, தப்பியோட முயன்ற பொ்னிக்கை, அந்தோணி பிலிப் துரத்திச் சென்று பிடித்தாா்.
அப்போது பொ்னிக்கின் சகோதரா் சஞ்சு (20), தாய் பாக்கியலட்சுமி ஆகியோா் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனராம்.
கைது செய்யப்பட்ட பொ்னிக் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவான அவரது தாய் மற்றும் சகோதரரை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

