தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மது விற்றதாக இளைஞா் கைது

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 2:24 am IST

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு ஆய்வாளா் மீஹா தலைமையில் போலீஸாா் ஜெயபிரகாஷ், பால்ராஜ், ஸ்ரீராம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது, கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், கடம்பூா் இளவேலங்கால் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் ராஜா (35) என்பதும், மது விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 562 மதுபாட்டில்கள், 1,600 பணத்தை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனா்.

மேலும், இது தொடா்பாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மேற்பாா்வையாளா், மதுபான கூடம் உரிமையாளா் சுப்பிரமணியம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.