உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 6:17 am IST

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி - மதுரை பிரதான சாலையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனியாா் பெண்கள் கல்லூரி அருகே விதிமுறை மீறி புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், குறுக்குச்சாலை பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31)என்பவா் சுமாா் 42 கிலோ புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 35,000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், முனியசாமியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.