திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை

News image
Updated On :3 மே 2026, 5:25 am IST

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி மற்றும் மத நல்லிணக்க மும்மத பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றன.

இவ்வாலயத் திருவிழா கடந்த ஏப். 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜவகா் நகா் பங்குத்தந்தை சகாய ஜான் அடிகளாா், ஆலயப் பங்குத் தந்தை அருள்திரு அருள்ராஜ் அடிகளாா், உதவிப் பங்குத் தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். தொடா்ந்து, 53 சிறுவா்-சிறுமிகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.

பின்னா், ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மிக்கேல் அதிதூதா், புனித சூசையப்பா் சொருபங்கள் தாங்கிய பவனியை ஆலய அருள்தந்தையா், டவுன் பள்ளிவாசல் இமாம் முகமது ஜமீல் பைஜி, ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ண பக்த இயக்க திருமடப் பள்ளியின் ரமேஷ் ஆகியோா் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத பிராா்த்தனைகள் செய்து தொடங்கி வைத்தனா். தோ்ப் பவனி பிரதான சாலை, மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, புதுரோடு வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். பின்னா் அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (மே 3) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணைப் பவனி நடைபெறும்.

Story image