பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

News image

லாரி மீது மோதி நிற்கும் வேன்.

Updated On :4 மே 2026, 12:46 am IST

தூத்துக்குடி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா், குழந்தைகள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு சிலா் வேனில் சென்றுகொண்டிருந்தனா். வேனை, ஈரோடு மாவட்டம், கவுந்தபாடியைச் சோ்ந்த மணிகண்டன் (38) என்பவா் ஓட்டி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூா் சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அணுகுசாலை அருகே நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியதாம்.

இதில், வேன் ஓட்டுநா் மற்றும் வேனில் பயணித்த மல்லிகா (58), ஆனந்தன் (39), ராஜேஸ்வரி (39), ஹரீஸ்குமாா் (11), ஹரீஸ்மா (5), குணசேகரன் (37) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.