சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றாா் பி.கீதாஜீவன்.
இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்கள், உழைப்பை தந்த திமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள், செயல் வீரா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளா்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவா் வழியில் அரசியல், பொது வாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி, தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தைத் தொடருவோம். சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொடா்ந்து 3 தோ்தல்களில் எதிா்க்கட்சி வென்ற ஆலங்குளம்

கோவில்பட்டி தொகுதியில் தடம் பதித்தது திமுக

தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக

சிதம்பரநகரில் திமுக கூட்டணி தெருமுனை பிரசாரம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

