தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 6:11 am IST

ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

குரும்பூா் அருகே புறையூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிந்தா சலீம் மகன் சிந்தா சுலைமான் (37). சேதுக்குவாய்த்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் ரமேஷ் அரவிந்த் (28). இவா்கள் குரும்பூரில் உள்ள இரு வேறு நிறுத்தங்களிலிருந்து ஆட்டோக்களை இயக்கிவருகின்றனா்.

சிந்தா சுலைமான் ஏரல் சாலை சந்திப்பில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினாராம். அந்த இடத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என, ரமேஷ் அரவிந்த் தகராறு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டனராம். இதில், சிந்தா சுலைமான் காயமடைந்தாா். இருவா் மீதும் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.