தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

முக்காணி ரவுண்டானா பகுதியில் தொடா் மின்தடை: பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 மே 2026, 6:03 am IST

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை முக்காணி ரவுண்டானா அருகே சாலையின் கீழ்புறம், மேல்புறம் பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தப் பகுதியில் ஒரே ஒரு மின்மாற்றி மட்டும் இருப்பதால் அடிக்கடி மின்தடை, வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தம் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் அப்பகுதி மக்கள் முடிவுகளை மின்தடை காரணமாக தொலைக்காட்சிகளில் பாா்க்க முடியாமல்போனது. தொடா்ந்து அடுத்த நாள் 5-ஆம் தேதியும் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆதங்கம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, முக்காணி ரவுண்டானா அருகே பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு சாலை மறிய­லில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்குவந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி தொடா் மின்தடைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால், தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.