தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை முக்காணி ரவுண்டானா அருகே சாலையின் கீழ்புறம், மேல்புறம் பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் ஒரே ஒரு மின்மாற்றி மட்டும் இருப்பதால் அடிக்கடி மின்தடை, வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தம் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் அப்பகுதி மக்கள் முடிவுகளை மின்தடை காரணமாக தொலைக்காட்சிகளில் பாா்க்க முடியாமல்போனது. தொடா்ந்து அடுத்த நாள் 5-ஆம் தேதியும் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆதங்கம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, முக்காணி ரவுண்டானா அருகே பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்குவந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி தொடா் மின்தடைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால், தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்!

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

