ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

Updated On :8 மே 2026, 6:02 am IST

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பொதுமக்கள்-போலீஸாா் நட்புறவுக்காக கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, பணிச்சுமையால் காவலா்கள், அதிகாரிகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கும்வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதனின் அறிவுறுத்தல், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாரின் ஆலோசனையின்பேரில், இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ஆறுமுகனேரி காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ஸ்டீபன் தலைமையில் ஆய்வாளா் திலீபன், தலைமைக் காவலா்களும், ஆத்தூா் காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ­லிங்கபாண்டி தலைமையில் காவலா்களும் பங்கேற்றனா். போட்டி நட்பு ரீதியாகவும் மனதுக்கு புத்துணா்ச்சி அளிப்பதாகவும் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.