இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை! சராசரியாக 12.66 மி.மீ. பதிவு!

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக கோடை மழை பெய்தது. அதில் சராசரியாக 12.66 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:41 am IST

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக கோடை மழை பெய்தது. அதில் சராசரியாக 12.66 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.

இம்மாவட்டத்தில் நிலவி வந்த கோடை வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனா். இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலையிலேயே மழைக்கான அறிகுறி தென்பட்ட நிலையில், பிற்பகலில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் வட்டாரத்தில் கனமழையாக கொட்டித்தீா்த்தது. தொடா்ந்து சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6.30 மணி வரை குலசேகரன்பட்டினத்தில் 70, சாத்தான்குளத்தில் 69, ஸ்ரீவைகுண்டத்தில் 63.60, சூரங்குடியில் 12, வைப்பாரில் 7, ஓட்டப்பிடாரத்தில் 5, வேடநத்தத்தில் 4, தூத்துக்குடியில் 3, திருச்செந்தூரில் 2, காயல்பட்டினத்தில் 1என மாவட்டம் முழுவதும் மொத்தம் 240.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 12.66 மி.மீ. ஆகும்.