விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மின் கம்பத்தில் காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:40 am IST

தூத்துக்குடியில் காா் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணித்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை மீனவா் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ஜீசஸ் (18). இவா், நண்பா்களான சரவணகுமாா் (24), அரவிந்த் (18), அஸ்வின் (18) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்செந்தூா் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தாராம். காரை தாளமுத்து நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த காளிதாஸ் (21) ஓட்டியுள்ளாா்.

சாந்தி நகா் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ஜீசஸ் உயிரிழந்தாா். மற்ற 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் காளிதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.