ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமயிலான போலீஸாா் புதன்கிழமை காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனா்.

அதில் கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (51) புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கண்ணன் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.