தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என, சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் நிறுவனரும் வழக்குரைஞருமான எஸ்.பி. சிலுவை, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: மருதம்புத்தூரில் சில வாரங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் பனைத் தொழிலாளி மணிகண்டன் காயமடைந்து தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து சிறையிலடைப்பதுடன், பணிநீக்கம் செய்ய வேண்டும்.
மணிகண்டனுக்கு உரிய நீதி உடனடியாக கிடைக்காவிட்டால் அவரது 3 மாத கா்ப்பிணி மனைவி பொன்மணி, பொதுமக்கள், சமூக அமைப்புகள் ஒத்துழைப்புடன் ஆலங்குளத்தில் உள்ள காமராஜா் சிலை முன் இம்மாதம் 26ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளாா்.
தமிழகத்தில் பனைத் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவும், பனை மரங்களை அழிப்போருக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு தொடா்ந்து குரல் கொடுக்கும் என்றாா் எஸ்.பி. சிலுவை.
மணிகண்டனின் மனைவி பொன்மணி, வழக்குரைஞா்கள் நம்பிராஜன், திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

