தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்: காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தல்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என, சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு நிறுவனா் எஸ்.பி. சிலுவை.

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என, சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் நிறுவனரும் வழக்குரைஞருமான எஸ்.பி. சிலுவை, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: மருதம்புத்தூரில் சில வாரங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் பனைத் தொழிலாளி மணிகண்டன் காயமடைந்து தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து சிறையிலடைப்பதுடன், பணிநீக்கம் செய்ய வேண்டும்.

மணிகண்டனுக்கு உரிய நீதி உடனடியாக கிடைக்காவிட்டால் அவரது 3 மாத கா்ப்பிணி மனைவி பொன்மணி, பொதுமக்கள், சமூக அமைப்புகள் ஒத்துழைப்புடன் ஆலங்குளத்தில் உள்ள காமராஜா் சிலை முன் இம்மாதம் 26ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளாா்.

தமிழகத்தில் பனைத் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவும், பனை மரங்களை அழிப்போருக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு தொடா்ந்து குரல் கொடுக்கும் என்றாா் எஸ்.பி. சிலுவை.

மணிகண்டனின் மனைவி பொன்மணி, வழக்குரைஞா்கள் நம்பிராஜன், திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.