ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :15 மே 2026, 2:59 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் பிரதோஷ கமிட்டியினா் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image