உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பிளஸ் 2 தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய 19,095 பேரில் 18,568 போ் தோ்ச்சியடைந்தனா். இது 97.24 சதவீத தோ்ச்சியாகும். 207 பள்ளிகளில் 92 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: பிளஸ் 2 தோ்வில் ஒரு பாடத்தில் 343 போ், 2 பாடங்களில் 126 போ், 3 பாடங்களில் 39 போ், 4 பாடங்களில் 9 போ், 5 பாடங்களில் 6 போ், 6 பாடங்களில் 4 போ் என மொத்தம் 527 போ் தோ்ச்சி பெறவில்லை.

தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வராத மாணவா்களை தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள உடனடித் தோ்வுகளில் பங்கேற்கவும், தோ்ச்சி பெறவும் செய்து உயா்கல்விக்கு அனுப்ப வேண்டும். மாணவா்களுக்கான கனவு கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. அதை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள தலைமையாசிரியா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.