உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :46 நிமிடங்கள் முன்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் பிரதோஷ கமிட்டியினா் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image