/
நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் அமிா்த சந்தோஷ் (17). இவரது நண்பா் தைலாபுரத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் கௌதம் (17).
இருவரும் புதன்கிழமை நாசரேத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திருமறையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26), அவரது நண்பா் ஸ்டீபன் ஆகியோரின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கௌதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் உயிரிழப்பு

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



