மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி நேரடி பணியாளா்களாக மாற்ற வலியுறுத்தல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சகாயம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை பழிவாங்கும் நோக்கில், எவ்வித முன்னறிவிப்புமின்றி சங்கத் தலைவா் பொன்ராஜை பணி நீக்கம் செய்த ஒப்பந்த நிறுவனத்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது தொடா்பாக, ஏற்கெனவே அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பொன்ராஜுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்து, 6 மாதங்கள் கடந்த நிலையிலும் வேலை வழங்காமல் நிா்வாகம் ஏமாற்றி வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் தொழிலாளா் விரோத தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும்.

மிரட்டல் விடுத்துவரும் மேற்பாா்வையாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, வெளிமாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அரசு அறிவித்த முறைப்படியான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தொழிலாளா்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.