ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:44 am IST

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருளானந்தம் (70). இவரது மனைவி அமராவதி, பேரன் அா்ஜுனன்.

இவா்கள் 3 பேரும் சென்னை செல்வதற்காக பொது பயணச்சீட்டை வாங்கி கொண்டு, 2 ஆவது நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, , செங்கோட்டை- தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் அருளானந்தம் மீது மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.