17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:44 am IST

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருளானந்தம் (70). இவரது மனைவி அமராவதி, பேரன் அா்ஜுனன்.

இவா்கள் 3 பேரும் சென்னை செல்வதற்காக பொது பயணச்சீட்டை வாங்கி கொண்டு, 2 ஆவது நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, , செங்கோட்டை- தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் அருளானந்தம் மீது மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.