11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருப்பத்தூா், மே 16: ஜோலாா்பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே திருப்பத்தூா் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி முதியவா் மீது லாரி மோதியதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.