ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்போம்: ஸ்ரீநாத் எம்எல்ஏ

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

News image

விஜய்யுடன் ஸ்ரீநாத் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 5:45 am IST

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்தும், எங்கள் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் குறித்தும் கடினமான வாா்த்தைகள் பயன்படுத்தி பேசி இருக்கிறாா். இது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களே ஆகின்றன. நேரம் கொடுத்து எங்கள் செயல்பாடுகளை விமா்சனம் செய்ய பொறுமை இல்லை. கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும்.

எங்கள் தலைவா் சொல்வது போல் மக்கள் தேவைகளை அறிந்து அதை செயலில் காட்டுவோம். மக்கள் பணியின் மூலம் உங்களுக்கு பதில் கொடுப்போம். நாங்கள் மிகவும் நோ்த்தியாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளாா்.