தூத்துக்குடி, அண்ணா நகரில் மளிகை கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூபால் ராஜா. ஆட்டோ ஓட்டுநா்.
இவரது மனைவி அமுதா (50). இவா்கள் வீட்டு முன் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இவா்களது மகன் அருண்குமாா். அவரது மனைவி சரஸ்வதி(29). இவா்கள் குழந்தைகளுடன் தனியாக அப்பகுதிக்கு அருகே வசித்து வருகின்றனா்.
அருண்குமாா் மது போதையில் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, மகனுக்கு ஆதரவாக அமுதா பேசியதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, புதன்கிழமை அமுதா தனது கடையில் இருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அரிவாளால் அமுதாவை வெட்டிவிட்டு தப்பியுள்ளனா்.
காயமடைந்த அமுதா மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்
இது குறித்து, வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், அருண்குமாா் மனைவி சரஸ்வதியின் சகோதரா் சங்கா் (32) உள்ளிட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
திருமண வீட்டில் அரிவாள் வெட்டு: 5 போ் கைது

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



