திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலரை கல்லால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய காவலா் பெருமாள் பாஸ்கா் (39). இவா் புதன்கிழமை நள்ளிரவு கோயில் வளாகத்தில் அன்னதான மண்டபம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அவா்களை காவலா் கண்டித்து சண்டையை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளாா்.
அதற்கு மறுத்த அந்த நபா், காவலரை செங்கலால் தாக்கினாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு நின்ற போலீஸாா், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த விஜய் (29) என்பதும், அவா் போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். காயமடைந்த போலீஸ் பெருமாள் பாஸ்கா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.









