இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தூத்துக்குடியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சான்றிதழ் பெற்ற மாணவா், மாணவிகள்.

Updated On :28 மே 2026, 2:51 am IST

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோடை கொண்டாட்ட நிகழ்வு மே 25 முதல் 27ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதில் புத்தக அறிமுகம், புத்தக வாசிப்பு, கதை சொல்லுதல், சிறாா் இணைப்பிதழ்கள் அறிமுகம், விளையாட்டுகள், காகித மடிப்பு கலை பயிற்சி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரிமா சங்கத்தைச் சோ்ந்த எஸ்.கே. ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அரிமா சங்கத்தைச் சோ்ந்த ஜி. திவாகா் வழங்கினாா்.

அரிமா சங்கச் செயலா் பி. சுரேஷ், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க தூத்துக்குடி கிளைச் செயலா் மை. வாலண்டினா, முக்காணி கிளைச் செயலா் சண்முக வடிவு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் ராம் சங்கா் வரவேற்றாா். நூலகா் ஜே. லதா நன்றி கூறினாா்.