இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

News image

ரயில்(கோப்புப்படம்)

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

தூத்துக்குடி-மும்பை சிஎஸ்எம்டி (01006) சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மறுமாா்க்கத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய இதன் இணை ரயில் மிகவும் காலதாமதத்துடன் வந்ததால், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ரயில் சுமாா் 7.30 மணி நேரம் தாமதத்திற்குப் பின் இரவு 11 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.

இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.