/
தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
தூத்துக்குடி-மும்பை சிஎஸ்எம்டி (01006) சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், மறுமாா்க்கத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய இதன் இணை ரயில் மிகவும் காலதாமதத்துடன் வந்ததால், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, இந்த ரயில் சுமாா் 7.30 மணி நேரம் தாமதத்திற்குப் பின் இரவு 11 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.
இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.










