மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

News image

ரயில்(கோப்புப்படம்)

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

தூத்துக்குடி-மும்பை சிஎஸ்எம்டி (01006) சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மறுமாா்க்கத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய இதன் இணை ரயில் மிகவும் காலதாமதத்துடன் வந்ததால், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ரயில் சுமாா் 7.30 மணி நேரம் தாமதத்திற்குப் பின் இரவு 11 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.

இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.