எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கடம்பூா் அருகே அணுகுசாலை மூடல்: மக்கள் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பு

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

News image

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

Updated On :29 மே 2026, 6:33 am IST

கடம்பூா் அருகே தண்டவாளத்தையொட்டி செல்லும் கோடங்கால் அணுகு சாலையை திறக்காவிட்டால் ஜூன் 15இல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

கடம்பூா் பேரூராட்சி கோடங்கால் என்ற சங்கராப்பேரி கிராமத்தில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி மக்கள் கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட ஊா்களுக்கு திருநெல்வேலி - கோவில்பட்டி இடையேயான தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

இங்கிருந்த ஆளில்லாத ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை ஏற்படுத்திய நிலையில் மழைக்காலங்களில் அங்கு தண்ணீா் தேங்கி மக்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, தண்டவாளத்தையொட்டிய இடத்தை ரயில்வே நிா்வாகம் மண் பாதை (அணுகு சாலை) அமைத்துக்கொடுத்தது.

இந்நிலையில் அணுகுசாலையை ரயில்வே நிா்வாகம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அடைத்துவிட்டது.

இதுதொடா்பாக கோடங்காலில் கிராம மக்கள் திரண்டு கூட்டம் நடத்தினா். அப்போது, ரயில்வே நிா்வாகம் மண் பாதையை திறக்காவிட்டால் ஜூன் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக மக்கள் தரப்பில் தெரிவித்தனா்.