கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பேரவைத் தலைவா் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறாா்! இன்பதுரை எம்.பி. குற்றச்சாடு!

News image

ஜே.சி.டி. பிரபாகர் - youtube

Updated On :30 மே 2026, 3:09 am IST

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நான்கு பேரின் ராஜிநாமாவை உடனடியாக ஏற்ன் மூலம் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறாா் என்றாா் இன்பதுரை எம்.பி.

இதுகுறித்து அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான இன்பதுரை தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழக வெற்றிக் கழகம் அடைந்த வெற்றி ஒரு மாயாஜால வெற்றி. தற்போது அதிமுகவிலிருந்து ஆள்பிடிக்கும் வேலையை அக்கட்சி செய்கிறது. அக்கட்சியினா் எல்கேஜி நிலையில் உள்ளனா். ஆட்சி செய்வதற்கான பயிற்சி இல்லை. ரீல்ஸ் மோகத்தில் வாழ்ந்தவா்கள்.

எனவே, அவா்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அவசர அவசரமாக அதிமுக உறுப்பினா்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சோ்த்து அவா்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

பேரவைத் தலைவா் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறாா்.

இதுகுறித்து ஆளுநரிடம் அதிமுக புகாா் அளிக்கும். அதிமுக வழக்குரைஞா் பிரிவு சாா்பில், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றாா்.