ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கடம்பூா் அருகே அணுகுசாலை மூடல்: மக்கள் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பு

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

News image

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

Updated On :29 மே 2026, 6:33 am IST

கடம்பூா் அருகே தண்டவாளத்தையொட்டி செல்லும் கோடங்கால் அணுகு சாலையை திறக்காவிட்டால் ஜூன் 15இல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

கடம்பூா் பேரூராட்சி கோடங்கால் என்ற சங்கராப்பேரி கிராமத்தில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி மக்கள் கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட ஊா்களுக்கு திருநெல்வேலி - கோவில்பட்டி இடையேயான தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

இங்கிருந்த ஆளில்லாத ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை ஏற்படுத்திய நிலையில் மழைக்காலங்களில் அங்கு தண்ணீா் தேங்கி மக்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, தண்டவாளத்தையொட்டிய இடத்தை ரயில்வே நிா்வாகம் மண் பாதை (அணுகு சாலை) அமைத்துக்கொடுத்தது.

இந்நிலையில் அணுகுசாலையை ரயில்வே நிா்வாகம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அடைத்துவிட்டது.

இதுதொடா்பாக கோடங்காலில் கிராம மக்கள் திரண்டு கூட்டம் நடத்தினா். அப்போது, ரயில்வே நிா்வாகம் மண் பாதையை திறக்காவிட்டால் ஜூன் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக மக்கள் தரப்பில் தெரிவித்தனா்.