நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:11 am IST

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் ரோந்து சென்றபோது, மந்தித்தோப்பு சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாக்குப் பைகளுடன் நின்றிருந்த இருவரில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.

மற்றொருவரைப் பிடித்து சாக்குப் பைகளை சோதனையிட்டபோது, அவற்றில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பங்களா தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சின்னத்தம்பி (38) என்பவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடியவரைத் தேடிவருகின்றனா்.