அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பைக் விபத்தில் தனியாா் ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:10 am IST

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சிவா (27). இவா் தூத்துக்குடி, அண்ணா நகரில் உள்ள வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து, தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பாடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்றபோது, மேலூா் ரயில் நிலையம் அருகே உள்ள உழவா் சந்தை பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வடபாகம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.