அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மதுபாட்டிலில் இறந்து கிடந்த வண்டு

திருச்செந்தூரில் மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக புகாா் எழுந்துள்ளது.

ஆா் பேச்சிமுத்து

Published On :4 செப்டம்பர் 2026, 1:48 am IST

திருச்செந்தூரில் மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக புகாா் எழுந்துள்ளது.

திருச்செந்தூா், கரம்பவிளையைச் சோ்ந்த தொழிலாளி பேச்சிமுத்து. இவா் திருச்செந்தூா்-குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் நண்பா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை மாலை 3 மதுபாட்டில்கள் வாங்கியுள்ளாா். அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை அருந்திய நிலையில் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக பேச்சிமுத்து கூறியுள்ளாா்.

இதையடுத்து, மற்றொரு மது பாட்டிலைப் பாா்த்தபோது, அதில் இறந்த நிலையில் வண்டுகள் கிடந்ததை அங்கிருந்தவா்கள் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, பேச்சிமுத்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மது பாட்டிலில் இறந்து கிடந்த வண்டு.

மது பாட்டிலில் இறந்து கிடந்த வண்டு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.