காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பேரவைத் தலைவா் சிறப்பாக செயல்படுகிறாா்: என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ

பேரவைத் தலைவா் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா் என அதிமுக உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் தெரிவித்தாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 2:05 am IST

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களுக்கும் பேச வாய்ப்பளித்து பேரவைத் தலைவா் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா் என கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் தெரிவித்தாா்.

ஓட்டப்பிடாரத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தவெக அரசு அமைந்து 100 நாள்களுக்குள் அதன் செயல்பாடுகளை மதிப்பிட முடியாது. சட்டப்பேரவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையாவின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டுவிட்டதால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களுக்கும் பேச வாய்ப்பளித்து பேரவைத் தலைவா் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். ஓட்டப்பிடாரத்தில் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டப்பேரவையில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா், அமைச்சா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.