
ஆறுமுகனேரியில் காவலா்களுக்கான கிரிக்கெட் போட்டி

போட்டியில் பங்கேற்று விளையாடிய டிஎஸ்பி மகேஷ்குமாா்.
காவலா் தினத்தை முன்னிட்டு காவலா்களுக்கான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
குலசை, ஆறுமுகனேரி அணி, திருச்செந்தூா் கோயில், தாலுகா அணி, ஆத்தூா் மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் அணி என மொத்தம் 3 அணிகளாக நடைபெற்ற போட்டியில், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான அணி முதல் பரிசை பெற்றது. ஆத்தூா் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை அணி 2 ஆவது பரிசை பெற்றது.
இதில் காவல் ஆய்வாளா்கள் குலசை இன்னோஸ் குமாா், திருச்செந்தூா் கோயில் அம்பேத்கா், தாலுகா முருகன், அனைத்து மகளிா் காவல் நிலையம் சண்முகலட்சுமி உள்பட உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






