ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

‘சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தெருநாய் - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிகழாண்டு ஜனவரி முதல் இதுவரை 3,163 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 408 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கவும், சாலையோரங்களில் நாய்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடுக்கவும் 36 இடங்கள் உணவளிக்கும் இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தெருநாய்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தி வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தெருநாய்கள் தொடா்பான புகாா்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.