உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஒற்றை விரலில் 12 மணி நேரம் தட்டைச் சுற்றும் இளைஞர்

திருவாரூர், மே 19: ஒற்றை விரலில் ஒரு கிலோ எடை கொண்ட தட்டை 12 மணி நேரம் சுற்றி லிம்கா சாதனை புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எம். வீரக்குமார். திருவாரூர் மாவ

Updated On :20 செப்டம்பர் 2012, 2:24 pm

திருவாரூர், மே 19: ஒற்றை விரலில் ஒரு கிலோ எடை கொண்ட தட்டை 12 மணி நேரம் சுற்றி லிம்கா சாதனை புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எம். வீரக்குமார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மருதையன். இவரது கடைசி மகன் வீரக்குமார் (29). இயந்திரப் பொறியியல் படிப்பில் பட்டயப் படிப்பு முடித்துள்ளார்.

இவர் பள்ளிப் பருவம் முதலே நோட்டு மற்றும் புத்தகங்களை தனது வலது கை ஆள்காட்டி விரலின் நுனியில் வைத்து சுற்றுவாராம். இதை தனது நண்பர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அப்போது சில நிமிஷங்கள் வரை சுற்றியுள்ளார்.  இதையே ஒரு சாதனையாக நிகழ்த்த வேண்டும் என விரும்பிய வீரக்குமார், தொடர்ந்து கையில் கிடைக்கும் பொருள்களை தனது விரலில் வைத்து சுற்றிக் கொண்டே பயிற்சி செய்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டில் தான் படித்த கல்லூரி மற்றும் சில இடங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்து விரலில் தட்டை வைத்து சுற்றிக் காட்டிய வீரக்குமாருக்கு சக நண்பர்களும், கிராம மக்களும்  இதில் அவர் சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஒரு கிலோ எடை கொண்ட தட்டை தொடர்ந்து 5 மணி நேரம் வரை சுற்றினார். தனது ஆள்காட்டி விரலில் தட்டை சுற்றிக் கொண்டிருக்கும்போதே அதே கையில் விரலை மாற்றியும், சுற்றிக் கொண்டிருக்கும் தட்டை உயரே தூக்கிப் போட்டு, மீண்டும் அதே விரலால் பிடித்தும், தட்டின் மீது பந்தை வைத்துச் சுற்றியும் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறார் வீரக்குமார்.

முதலில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென்ற நோக்கில் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியின் பலனாக ஒரு கிலோ எடை கொண்ட தட்டை தொடர்ந்து 12 மணி நேரம் சுற்றிய வீரக்குமாரின் சாதனையை, தற்போது லிம்கா சாதனை புத்தகம் தேசிய அளவிலான சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து வீரக்குமார் கூறியது:

இளம் வயதிலிருந்தே தொடங்கிய பழக்கம் என்றாலும், கராத்தே மூலம் கற்றுக் கொண்ட மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவற்றாலும் தொடர்ந்து 24 மணி நேரம் தட்டை சுற்றி, கின்னஸில் இடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் காரணமாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதுபோன்ற சாதனையை வேறு யாரும் இதுவரை செய்யவில்லை. கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையை இடம் பெறச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எனது நண்பர்கள் மூலமாகத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளேன்.

கின்னஸில் இடம் பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதை விரைவில் சாதிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்  வீரக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.