நகரில் 32 குளங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் உள்ள நகாட்சிக்கு முன்புறம் உள்ள ராமர் மடக்குளம், பின்புறம் உள்ள நந்தவனக் குளம், செங்கமலக்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் வந்து செல்ல வழியின்றி, மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் கேந்திரங்களாக மாறி, நகரின் சுகாதாரக் கேட்டிற்கு பெரிதும் காரணமாக உள்ளன. இந்தக் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து கைப் பம்புகளில் தண்ணீர் வருவதே இல்லை. மேலும், இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் தாங்கள் குளிப்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.