திருவாரூர், ஜன. 8: மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர்.
2010 - 2011-ம் கல்வி ஆண்டுக்கான 28-வது மாநில அளவிலான பாரதியார் பிறந்த தின விளையாட்டுப் போட்டிகள் டிச. 27 முதல் 29-ம் தேதி வரை வேலூரில் நடைபெற்றன. இதில் பூப்பந்தாட்டப் போட்டியில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று மாநில அளவில் இரண்டாமிடம் வென்றனர்.
இம் மாணவிகளை பள்ளித் தாளாளர் எம். பெரியசாமி, தலைமையாசிரியை ஆர். ரத்தினகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.